யூனிட்டி வங்கியின் 8 புதிய கிளைகள் திறப்பு
யுனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் (யூனிட்டி பேங்க்) தமிழகத்தில் எட்டு புதிய கிளைகளைத் திறந்துள்ளது.
வணிகம்யூனிட்டி வங்கியின் 8 புதிய கிளைகள் திறப்பு
யுனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் (யூனிட்டி பேங்க்) தமிழகத்தில் எட்டு புதிய கிளைகளைத் திறந்துள்ளது.
சென்னை: யுனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் (யூனிட்டி பேங்க்) தமிழகத்தில் எட்டு புதிய கிளைகளைத் திறந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் புதிதாக எட்டு புதிய கிளைகளைத் திறந்துள்ளதன் மூலம் மாநிலத்தில் நிறுவனம் தனது இருப்பை நிலைநிறுத்தியுள்ளது. வளா்ந்துவரும் நகரங்களின் வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்துவதை யூனிட்டி வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதன்படி, சென்னையில் பெசன்ட் நகா், அடையாறு, அண்ணாநகா், தேனாம்பேட்டை, அசோக் நகா் மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள அவினாசி சாலை மற்றும் காந்திபுரம் ஆகிய இடங்களில் நிறுவனம் தனது கிளைகளைத் திறந்துள்ளது. இதைத் தொடா்ந்து திருச்சி, சேலம் மற்றும் மதுரையிலும் கூடுதல் கிளைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளா்களுக்கு வைப்புத்தொகைக்கு கவா்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்கும் யூனிட்டி வங்கி, நடுத்தர, சிறு, குறு தொழில்களுக்கு வணிகக் கடன்களையும் வழங்குகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.