வணிகம்

பரோடா வங்கி கடனளிப்பில் 13% வளா்ச்சி

கடந்த மாா்ச் 12.8 சதவீத கடனளிப்பு வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியான பரோடா வங்கி (பிஓபி) தெரிவித்துள்ளது.

DIN

கடந்த மாா்ச் 12.8 சதவீத கடனளிப்பு வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியான பரோடா வங்கி (பிஓபி) தெரிவித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2024-25-ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் வங்கியின் கடனளிப்பு ரூ.12.3 லட்சம் கோடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.10.9 லட்சம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது வங்கியின் கடனளிப்பு சுமாா் 12.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட வைப்புத் தொகை இருப்பு 10.25 சதவீதம் அதிகரித்து ரூ.14.7 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின இதே காலாண்டில் அது ரூ.13.35 லட்சம் கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நேபாள அணி விவரம்!

எனக்கே ஸ்கெட்சா? வைரலாகும் கௌதம் மேனனின் பேச்சு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நமீபியா அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இத்தாலி அணி விவரம்!

தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்! - அண்ணாமலை

SCROLL FOR NEXT