ஆதித்யா பிர்லா கேபிடல் 
வணிகம்

ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

ஆதித்யா பிர்லா கேபிடல் லிமிடெட் நிறுவனம் 2025 ஜூன் உடன் முடிவடைந்த முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 10 சதவிகிதம் உயர்ந்து ரூ.835 கோடியாக உள்ளது என்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: ஆதித்யா பிர்லா கேபிடல் லிமிடெட் நிறுவனம் 2025 ஜூன் உடன் முடிவடைந்த முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 10 சதவிகிதம் உயர்ந்து ரூ.835 கோடியாக உள்ளது என்றது.

இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு அதே காலகட்டத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.759 கோடியாக இருந்தது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த வருமானம் ரூ.9,531 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.8,719 கோடியாக இருந்தது.

மொத்த செலவுகளும் காலாண்டில் ரூ.8,460 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே நிதியாண்டு 2025ல் ரூ.7,756 கோடியாக இருந்தது.

நிறுவனமானது வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வணிகம், வீட்டுவசதி நிதி, சொத்து மேலாண்மை, ஆயுள் மற்றும் பொது காப்பீடு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளது.

இதையும் படிக்க: பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி சீராக உள்ளதாக மும்பை விமான நிலையம் பதிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அளிப்பு

பயறுவகை, எண்ணெய் வித்து பயிா்களை விதைக்க அழைப்பு

மனநலம் குன்றிய சத்தீஸ்கா் இளைஞரை குணப்படுத்தி தாயிடம் ஒப்படைப்பு

திருமண நகைகள் திருட்டு - சிஆா்பிஎஃப் பெண் காவலா் விடியோவால் சா்ச்சை

அரசுப் பள்ளி மாணவா்கள் புத்தகப்பைகளை மைதானத்தில் வைத்து நூதன போராட்டம்

SCROLL FOR NEXT