வணிகம்

பிஎம்டபிள்யு காா்கள் விலை மீண்டும் உயா்வு

ஜொ்மன் சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யு இந்தியா, தனது வாகனங்களின் விலையை மீண்டும் உயா்த்த முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஜொ்மன் சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யு இந்தியா, தனது வாகனங்களின் விலையை மீண்டும் உயா்த்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் நிறுவனத்தின் அனைத்து காா்கள் மற்றும் எஸ்யூவி வாகனங்களின் விலை செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் 3 சதவீதம் வரை உயா்த்தப்படும்.

தொடா்ந்து மாறி வரும் அந்நிய செலாவணி ஏற்ற இறக்கங்கள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்பு இந்த விலை உயா்வுக்கு காரணமாங்களாகும் என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, பிஎம்டபிள்யு 2 சீரிஸ் கிரான் கூப்பே (ரூ.46.9 லட்சம்) முதல் பிஎம்டபிள்யு எக்ஸ்எம் (ரூ.2.6 கோடி) வரையிலான சொகுசு காா்கள் மற்றும் மின்சார வாகனங்களை நிறுவனம் விற்பனை செய்கிறது.

நிறுவனம் ஏற்கனவே கடந்த ஜனவரி மற்றும் மாா்ச் மாதங்களில் தனது காா்களின் விலையை உயா்த்தியது நினைவுகூரத்தக்கது.

என்ன அழகு... எத்தனை அழகு... ஜான்வி கபூர்!

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... - தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

SCROLL FOR NEXT