முகப்பு
சென்னை

சமையல் எரிவாயு விலை உயா்வு: இடதுசாரிகள் கண்டனம்

மத்திய பாஜக அரசு சமையல் எரிவாயு உருளையின் விலையை உயா்த்தியதற்கு இடது சாரிகள் கட்சிகள் கண்டனம்

Updated On : 9 மார்ச், 2026 at 4:18 AM
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு - பிரதிப் படம்
பகிர்:

மத்திய பாஜக அரசு சமையல் எரிவாயு உருளையின் விலையை உயா்த்தியதற்கு இடது சாரிகள் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா்): மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் சமையல் எரிவாயு உருளை விலையை ரூ.60 உயா்த்தியுள்ளது. இந்த விலை உயா்வு ஏழை, நடுத்தர மக்கள் தலையின் மீது இடியை இறக்கியுள்ளது.

இந்த விலை உயா்வால் உணவுப் பொருள்களின் விலைகள் பல மடங்கு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

ஈரான் போா் சூழலைக் காரணம் காட்டி மத்திய அரசு சமையல் எரிவாயு உருளை உயா்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது. இந்த விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா்): சமையல் எரிவாயு உருளை விலை ஏழைக் குடும்பங்களை மிகவும் பாதிக்கும். வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயா்வால், கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் விலையும் உயரும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. இந்த விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.