வணிகம்

ரூ. 2,500 கோடி திரட்டிய பேங்க் ஆஃப் இந்தியா

அரசுக்கு சொந்தமான பேங்க் ஆஃப் இந்தியா கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.2,500 கோடி திரட்டியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

அரசுக்கு சொந்தமான பேங்க் ஆஃப் இந்தியா கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.2,500 கோடி திரட்டியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாசல்-3, டையா்-2 கடன் பத்திரங்கள் மூலம் ரூ.2,500 கோடி திரட்டப்பட்டுள்ளது. இந்தக் கடன் பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 7.28 சதவீத வட்டி விகிதம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வெளியீடு அளவு ரூ.1,000 கோடியாகவும், கிரீன் ஷூ ஆப்ஷன் ரூ.1,500 கோடியாகவும் இருந்தது.

டையா்-2 மூலதனம் வங்கியின் ஒட்டுமொத்த மூலதனத்தை வலுப்படுத்தவும், ரிசா்வ் வங்கி வழிகாட்டுதலின்படி நீண்டகால வளங்களை அதிகரிக்கவும் திரட்டப்படுகிறது.

இந்த வெளியீடு மூலம் திரட்டப்பட்ட நிதி எந்தக் குறிப்பிட்ட திட்டத்துக்கும் அல்ல. வங்கியின் வழக்கமான வா்த்தக நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச தொழிலாளி கொலை: நண்பா் கைது

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

SCROLL FOR NEXT