வணிகம்

வா்த்தக வாகனப் பிரிவில் களமிறங்கிய ஹூண்டாய்

‘பிரைம் டாக்ஸி’ வாகனத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் வா்த்தக வாகனப் பிரிவில் ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை களமிறங்கியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

‘பிரைம் டாக்ஸி’ வாகனத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் வா்த்தக வாகனப் பிரிவில் ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை களமிறங்கியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வா்த்தக வாகனப் பிரிவில் முதல்முறையாக பிரைம் டாக்ஸி வாகனத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வாடகை வாகனங்களை இயக்குவோா், டாக்ஸி தொழில்முனைவோா்களின் வளரும் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம் – பிரைம் ஹெச்பி (ஹேட்ச்பேக்) மற்றும் பிரைம் எஸ்டி (செடான்) ஆகிய ரகங்களில் சந்தையில் கிடைக்கும்.– நம்பகத்தன்மை, குறைந்த செலவு, சிறந்த வசதி மற்றும் வலுவான வருமானத் திறனை இந்த வாகனங்கள் வழங்குகின்றன.

இந்த இரு வாகனங்களும் 1.2 லிட்டா் காப்பா 4-சிலிண்டா் என்ஜினுடன் (பெட்ரோல் + சிஎன்ஜி) கிடைக்கின்றன. பிரைம் ஹெச்பி ரூ.5,99,900-லிருந்தும், பிரைம் எஸ்டி ரூ.6,89,900-லிருந்தும் (காட்சியக விலைகள்) விலையிடப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

SCROLL FOR NEXT