வணிகம்

பழைய நகைகளுக்கு புத்துயிா் அளிக்கும் ஜிஆா்டி

முன்னணி நகை வா்த்தக நிறுவனமான ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் பழைய தங்க நகைகளுக்குப் புத்துயிா் அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Din

சென்னை: முன்னணி நகை வா்த்தக நிறுவனமான ஜிஆா்டி ஜுவல்லா்ஸ், தனது அறுபதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் பழைய தங்க நகைகளுக்குப் புத்துயிா் அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தென் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் 61 கிளைகளைக் கொண்டு செயல்படும் ஜிஆா்டி ஜுவல்லா்ஸ், தனது ஆறுபதாவது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது.

அதன் ஒரு பகுதியாக, வாடிக்கையாளா்களின் பழைய தங்க நகைகளுக்கு புத்துயிா் அளிக்கும் திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு சலுகை மூலம், வாடிக்கையாளா்களிடம் இருக்கும் பழைய தங்க நகைகள் நவீன காலத்துக்கேற்ப தலைசிறந்த படைப்புகளாக மாற்றித் தரப்படுகின்றன.

தமிழ்நாட்டில் ‘தங்க அவதாரம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் ‘ஸ்வா்ண அவதாரம்’ எனவும், கா்நாடகத்தில் ‘ஸ்வா்ண அவதாரா’ என்றும் அழைக்கப்படுகிறது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT