கோப்புப் படம் 
வணிகம்

2025-ல் இதுவரை ரூ. 1 லட்சம் கோடி வெளிநாட்டு நிதி வெளியேற்றம்!

பிப்ரவரில் கடந்த இரு வாரங்களில் மட்டும் ரூ. 21,272 கோடி வெளிநாட்டு நிதி வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

2025-ஆம் ஆண்டில் இதுவரை இந்திய பங்குச் சந்தையில் இருந்து ரூ. 1 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பிப்ரவரில் கடந்த இரு வாரங்களில் மட்டும் ரூ. 21,272 கோடி வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிகராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து வரி விதிப்பில் செய்த மாற்றங்கள் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட நிலையற்றத்தன்மை உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகள் குறைந்து வருகின்றன.

கடந்த ஜனவரி மாதத்தில் ரூ. 78,027 கோடி வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளன. பிப்ரவரியில் இரண்டு வாரங்களில் 21,272 கோடி நிதி வெளியேறியுள்ளது. இவை இரண்டையும் சேர்த்து ரூ. 99,299 கோடி வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளது.

ஜியோஜித் என்ற நிதிச் சேவை நிறுவனத்தின் மூத்த முதலீட்டு வல்லுநர் வி.கே. விஜயகுமார், டாலர் மதிப்பு குறையும்போது வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவது தலைகீழாக நடக்கும் என்றும் அதுவரை இந்த நிலை தொடரும் எனவும் குறிப்பிட்டார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சர்வதேச அரசியலானது, இந்தியா போன்ற ஏற்ற இறக்கங்கள் அடிக்கடி நிகழும் சந்தையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால், இந்திய பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்துக்கான ஒதுக்கீடு கணிசமாக குறைப்பு

இருசக்கர வாகனங்கள் திருட்டு: சிறுவன் உள்பட இருவா் கைது

விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்: வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அறிவுறுத்தல்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி தெப்போற்சவம் நிறைவு

கூழமந்தலில் பூச நட்சத்திர அதி தேவதைக்கு சிறப்பு அபிஷேகம்

SCROLL FOR NEXT