சோயாபீன் கொள்முதல் காலக்கெடுவை நீட்டித்த மத்திய அரசு!
மாநில அரசுகளின் கோரிக்கைகளைத் தொடர்ந்து சோயாபீன் கொள்முதல் காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளதாக வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.
புதுதில்லி: மாநில அரசுகளின் கோரிக்கையை தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் சோயாபீன் கொள்முதல் காலக்கெடுவை ஜனவரி 31 வரையும், ராஜஸ்தானில் பிப்ரவரி 4 வரையும் மத்திய அரசு நீட்டித்துள்ளதாக வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் முந்தைய காலக்கெடுவான ஜனவரி 12 தேதியும் மற்றும் ராஜஸ்தானுக்கு ஜனவரி 15 என்று இதற்கு முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது கொள்முதல் நடைபெற்று வருகிறது. மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மகாராஷ்டிர மற்றும் ராஜஸ்தானில் கொள்முதல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளோம்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: டாடா மோட்டார்ஸுடன் சரஸ்வத் வங்கி ஒப்பந்தம்!
தெலுங்கானாவிலிருந்து 25,000 டன் கூடுதல் கொள்முதல் செய்யவும் அனுமதித்து உள்ளோம். அதே வேளையில், ஏற்கனவே அதன் ஆரம்ப இலக்கான 59,508 டன்களை எட்டியுள்ளது.
நாடு முழுவதும் மொத்த சோயாபீன் கொள்முதல் இதுவரை 13.68 லட்சம் டன்களை எட்டியுள்ளது.
மகாராஷ்டிர மற்றும் ராஜஸ்தானில் கொள்முதல் ஆதரவு விலை திட்டத்தின் கீழ் கொள்முதல் நடைபெறுகிறது. சோயாபீன் குறைந்தபட்ச ஆதரவு விலையான குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,892க்கு என்று நிர்ணயம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.