FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

டிசிஎஸ் பங்குகள் 2.51% சரிவு!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 2.51 சதவிகிதம் சரிந்தன.

Updated On : 11 ஜூலை 2025, 10:22 pm IST
கோப்புப் படம்
பகிர்:

புதுதில்லி: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 2.51 சதவிகிதம் சரிவுடன் முடிவடைந்தன.

நிறுவனத்தின் ஜூன் முடிய உள்ள காலாண்டு வருவாய் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தத் தவறியதால் பங்குகள் விலை சரிந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

பிஎஸ்இ-யில் 2.43 சதவிகிதம் சரிந்து ரூ.3,300 ஆக இருந்தது. அதே வேளையில் என்எஸ்இ-யில் 2.51 சதவிகிதம் குறைந்து ரூ.3,297 ஆக முடிவடைந்தது. இதனையடுத்து இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவன பங்குகளும் விறப்பனை அழுத்தத்தை சந்தித்தது.

Advertisement

Advertisement

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் 6 சதவிகித லாப உயர்வுடன் சந்தை எதிர்பார்ப்புகளை முறியடித்தன. இருப்பினும் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக உற்சாகம் குறைந்தது.

நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நேற்று ஜூன் மாதம் வரையான காலாண்டு நிகர லாபம் 6 சதவிகித வளர்ச்சியடைந்து ரூ.12,760 கோடியாக உள்ளது என்றது.

டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள், ஐடி நிறுவனங்களுக்கு, குறிப்பாக பெரிய நிறுவனங்களுக்கு, தொடர்ச்சியான போராட்டத்தை சந்திக்க நேரிடும். இருப்பினும், ஐடி மிட்கேப் குறியீடுகள் சிறப்பாகச் செயல்பட்டது.

இதையும் படிக்க: க்ளென்மார்க் பார்மா பங்குகள் 10% உயர்வுடன் நிறைவு!

summary

TCS dropped 2.51 per cent today after its June quarter earnings failed to enthuse investors.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments