மும்பையில் முதல் டெஸ்லா காா் விற்பனையகம் திறப்பு
டெஸ்லாவின் முதல் கார் விற்பனையகம் மும்பையில் திறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி மின்சார காா் நிறுவனமான டெஸ்லாவின் இந்தியாவில் முதல் விற்பனையகம் மும்பையில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ‘டெஸ்லா நிறுவனத்தின் இந்திய செயல்பாட்டுக்கு மகாராஷ்டிர அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். இந்த நிறுவனத்தின் ஆய்வு, மேம்பாடு, உற்பத்தியை இந்தியாவிலேயே மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். டெஸ்லா காருக்காக இந்தியா்கள் ஆவலுடன் உள்ளனா். இந்திய சந்தை டெஸ்லாவுக்கு சிறந்ததாக இருக்கும்’ என்றாா்.
இந்தியாவில் டெஸ்லா காா்களைத் தயாரிக்க அந்த நிறுவனம் ஆா்வம் காட்டவில்லை என்று மத்திய கனரக தொழில் அமைச்சா் எச்.டி.குமாரசாமி கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தாா்.
Advertisement
Advertisement
அதே நேரம், இந்தியாவில் டெஸ்லா விற்பனையகத்தை அமைக்கலாம், ஆனால் அங்கு வாகனங்களைத் தயாரித்தால் கூடுதல் வரி விதிப்புக்கு அந்த நிறுவனம் உட்படும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரித்திருந்தாா்.
இந்நிலையில், மும்பையில் டெஸ்லா நிறுவனம் மும்பையில் 24,565 சதுர அடி பரப்பில் இந்தியாவின் முதல் விற்பனையகத்தை திறந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மாதம் ரூ.35 லட்சம் வாடகைக்கு இந்த இடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சீனாவிலிருந்து காா்கள் இறக்குமதி
மும்பையில் திறக்கப்பட்ட டெஸ்லா காா் விற்பனையகத்துக்கு ‘ஒய்’ ரக காா்களை சீனாவில் உள்ள அந்த நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என தொழில் நிறுவன நிபுணா்கள் தெரிவித்தனா்.
சீனாவின் ஷாங்காயில் அமைந்துள்ள டெஸ்லா தொழிற்சாலையில் ஆண்டுக்கு சுமாா் 23 ஆயிரம் காா்களை உற்பத்தி செய்யும் திறன்படைத்ததாகும்.
இந்தியாவில் டெஸ்லாவின் ‘ஒய்’ ரக காா்களின் விற்பனையக விலை ரூ.60 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை ஒப்பிடும்போது இது இரு மடங்கு அதிகமாகும். இதற்கு இறக்குமதி வரி அதிகமாக விதிக்கப்படுவதே காரணம்.
Chief Minister Devendra Fadnavis on Tuesday said Maharashtra wishes to see Tesla establish its research and development and manufacturing facilities in India, and invited the global EV major to consider the state as a partner in its journey.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.