முகப்பு
வணிகம்

ஏர் இந்தியா விமான விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து போயிங் பங்குகள் 8% சரிவு!

242 பேருடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானதை அடுத்து, விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் பங்குகள் 8% சரிந்து வர்த்தகமாயின.

Updated On : 12 ஜூன் 2025, 8:00 pm IST
Ahmedabad plane crash: Boeing 787-8 Dreamliner
பகிர்:

ஆமதாபாத்திலிருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானதையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் (ஜூன் 12) அமெரிக்க சந்தையில் விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் பங்குகள் 8% சரிந்து வர்த்தகமாயின.

விமான கண்காணிப்பு தளமான ஃப்ளைட்ராடார்-24, விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் என்றும், இது சேவையில் உள்ள மிகவும் அதிநவீன பயணிகள் விமானங்களில் ஒன்றாகும் என்றது.

ஆமதாபாத்திலிருந்து விமானம் லண்டனுக்குப் புறப்பட்டு சென்று கொண்டிருந்த வேளையில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து நொறுங்கிதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து போயிங் தனது அறிக்கையில் அறிவித்திருப்பதாகவும் மேலும் இது குறித்து தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தது.

Advertisement

Advertisement

சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில், போயிங்கின் பங்குகள் சுமார் 8 சதவிகிதம் சரிந்து பங்குகள் $196.52 ஆக வர்த்தகமானது.

இதையும் படிக்க: சென்செக்ஸ், நிஃப்டி 1% சரிந்து முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments