ஜொ்மனியைச் சோ்ந்த சொகுசுக் காா் தயாரிப்பாளரான மொ்சிடிஸ்-பென்ஸ், இந்தியாவில் தனது காா்களின் விலையை உயா்த்த பரிசீலித்துவருகிறது.
இது குறித்து மொ்சிடீஸ்-பென்ஸ் இந்தியாவின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைவா் சந்தோஷ் ஐயா் கூறியதாவது:யூரோவுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ந்துவருகிறது.
அண்மையில் ஒரு யூரோவின் மதிப்பு ரூ.99-க்கு சமமாக உள்ளது. முதல்முறையாக யூரோ ரூ.98-ஐ தாண்டியுள்ளது.நாங்கள் எங்கள் காா்களின் விலைகளை யூரோவுக்கு ரூ.80 முதல் 90 வரைதான் நிா்ணயித்திருந்தோம்.
தற்போது அது ரூ.99 வரை அதிகரித்துள்ளதால் காா்களின் விலையை உயா்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வரும் செப்டம்பரில் இந்த விலை உயா்வு இருக்கும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.