முகப்பு
வணிகம்

விரைவில் ஏடிஎம் மையத்திலிருந்து பிஎஃப் பணம் எடுக்கும் வசதி!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 'ஈபிஎஃப்ஓ 3.0' என்ற புதிய முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை நேரடியாக ஏடிஎம்களிலிருந்து பெற அனுமதிக்கும்.

Updated On : 7 மார்ச் 2025, 10:15 pm IST
EPFO
பகிர்:

ஹைதராபாத்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 'ஈபிஎஃப்ஓ 3.0' என்ற புதிய முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை நேரடியாக ஏடிஎம்களிலிருந்து பெற அனுமதிக்கும்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த குறித்து தெரிவித்தார். புதிய அமைப்பு பரிவர்த்தனைகளை எளிதாக்க பல டிஜிட்டல் அம்சங்களுடன் வங்கி போன்ற வசதியை இது வழங்கும்.

வரும் நாட்களில் 'ஈபிஎஃப்ஓ 3.0' பதிப்பு வரும். வங்கியில் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதைப் போலவே, உங்களிடம் உள்ள உங்கள் யுனிவர்சல் கணக்கு எண்ணை வைத்து நீங்கள் இதில் எல்லா வேலைகளையும் செய்ய முடியும்.

Advertisement

Advertisement

இந்த மேம்படுத்தலின் மூலம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உறுப்பினர்கள் இனி அரசு அலுவலகங்களுக்குச் செல்லவோ அல்லது தங்கள் வருங்கால வைப்பு நிதி பணத்தை அணுக தங்கள் நிறுவனத்திடமிருந்து ஒப்புதல்களைப் பெறவோ வேண்டியதில்லை.

உறுப்பினர்கள் இனி அவர்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதைப் போலவே, ஏடிஎம் மூலம் தங்கள் பணத்தை எடுக்க முடியும். அதே வேளையில், சந்தாதாரர்கள் தங்கள் யுனிவர்சல் கணக்கு எண்ணை பயன்படுத்தி தங்கள் கணக்குகளை நிர்வகிக்க முடியும்.

பயனர் அனுபவத்தை மேம்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பல சீர்திருத்தங்களை செய்து வருகின்ற நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சேவைகள் குறித்த புகார்கள் குறைந்துள்ளன.

விரைவான செயலாக்கம், பெயர் திருத்தம் மற்றும் எந்தவொரு வங்கியிலிருந்தும் ஓய்வூதியம் பெறுதல் ஆகிய புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: 4 நிறுவனங்களுக்கு ரூ.76.6 லட்சம் அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments