ரிசர்வ் வங்கி 
வணிகம்

அந்நிய செலாவணி கையிருப்பு 690.61 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்வு: ரிசர்வ் வங்கி

DIN

மும்பை: இந்தியாவில் தங்க கையிருப்பு அதிகரித்ததின் பின்னணியில், மே 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பு 4.553 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 690.617 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 2.065 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்து 686.064 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2024 செப்டம்பர் மாத இறுதியில் அந்நிய செலாவணி கையிருப்பு 704.885 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மே 9 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 196 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்து 581.373 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கையிருப்பில் முக்கிய அங்கமான அந்நியச் செலாவணி சொத்து 196 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்து 581.373 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த வாரத்தில் தங்க இருப்பு 4.518 பில்லியன் டாலர் உயர்ந்து 86.337 பில்லியன் டாலர்களாக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியாவின் இருப்பு நிலை 134 மில்லியன் டாலர் குறைந்து 4.374 பில்லியன் டாலர்களாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் 1 காசு உயர்ந்து ரூ.85.53 ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

பிகார் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! பிரசாந்த் கிஷோர்

நவம்பர் 1 முதல் நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25% வரி!

உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT