PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.88.80 ஆக நிறைவு!

பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட எதிர்மறையான போக்கும், அமெரிக்க டாலர் உயர்வு ஆகியவற்றால், ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.88.80 ஆக நிறைவு.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட எதிர்மறையான போக்கும், ஒரே இரவில் அமெரிக்க டாலர் உயர்ந்ததால், இந்திய ரூபாயின் மதிப்பு அதன் வரலாறு காணாத அளவுக்கு, 12 காசுகள் சரிந்து, ரூ.88.80 ஆக நிறவடைந்தது.

உலகளாவிய அளவில் அந்நிய நிதி வெளியேற்றமானது முதலீட்டாளர்களின் உணர்வை வெகுவாக பாதித்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இருப்பினும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு, ரிசர்வ் வங்கியின் தலையீடால், இந்திய ரூபாயின் மதிப்பின் சரிவானது கணிசமாக தடுக்கப்பட்டது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணியில், ரூபாய் மதிப்பு ரூ.88.73 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.88.81 முதல் ரூ.88.73 என்ற வரம்பில் வர்த்தகமானது. முடிவில் 12 காசுகள் சரிந்து ரூ.88.80ஆக நிறைவடைந்தது.

செப்டம்பர் 30ஆம் தேதியன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு எப்போதும் இல்லாத அளவாக ரூ.88.80 முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அந்நிய நிதி வெளியேற்றத்தால் பங்குச் சந்தைகள் 2-வது நாளாக சரிவுடன் நிறைவு!

The rupee depreciated 12 paise to revisit its all-time low of 88.80 against the US dollar on Tuesday, weighed down by negative domestic equities and overnight gains in the American currency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழுப்புரம் நகரத்தில் மேம்பாலம் அமைக்க சிஐடியு வலியுறுத்தல்

புதுவை பல்கலை. மாணவா்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்!

கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நில அளவை பயிலரங்கம்

ஆயத்த ஆடை ஆலையில் தீ: வங்கதேசத்தில் 16 பேர் உயிரிழப்பு

திமுக- காங்கிரஸ் கூட்டணி சிறப்பாக உள்ளது: கே.வி. தங்கபாலு

SCROLL FOR NEXT