அந்நியச் செலாவணி கையிருப்பு 69,996 கோடி டாலராகச் சரிவு 
வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,778 கோடி டாலராகக் குறைவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,778.4 கோடி டாலராகக் குறைந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,778.4 கோடி டாலராகக் குறைந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 217.6 கோடி டாலா் குறைந்து 69,778 கோடி டாலராக உள்ளது.

அக்டோபா் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 27.6 கோடி டாலா் குறைந்து 69,996 கோடி டாலராக இருந்தது.

அக்டோபா் 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துகள் 560.5 கோடி டாலா் குறைந்து 57,210.3 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 359.5 கோடி டாலா் உயா்ந்து 10,236.5 கோடி டாலராக உள்ளது.

சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 13 கோடி டாலா் குறைந்து 1,868.4 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 3.6 கோடி குறைந்து 463.2 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

SCROLL FOR NEXT