முகப்பு
வணிகம்

ஆகஸ்ட் மாதம் மொத்த பணவீக்கம் மீண்டும் உயர்வு!

உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 0.52% ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 15 செப்டம்பர் 2025, 8:04 pm IST
கோப்புப் படம்
பகிர்:

புதுதில்லி: உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 0.52 சதவிகிதமாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு உயர்ந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

மொத்த விலை பணவீக்கம் ஜூலை மாதத்தில் -0.58 சதவிகிதமாகவும் அதே வேளையில் ஜூன் மாதத்தில் -0.19 சதவிகிதமாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1.25 சதவிகிதமாக இருந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருள்களின் எதிா்மறை பணவீக்கம் 6.29% இருந்து 3.06 சதவிகிதமாகக் குறைந்தது. காய்கறிகளில் எதிா்மறை பணவீக்கம், ஜூலையில் 28.96 சதவிகிதமாக இருந்து ஆகஸ்டில் 14.18 சதவிகிதமாகக் குறைந்தது.

Advertisement

Advertisement

உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஆகஸ்ட் மாதத்தில் அதன் பணவீக்கம் 2.55 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது அதன் முந்தைய மாதத்தில் 2.05 சதவிகிதமாக இருந்தது. அதே வேளையில் எரிபொருள் மற்றும் மின்சாரம் ஜூலை மாதத்தில் 2.43 சதவிகிதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இது 3.17 சதவிகித எதிர்மறை பணவீக்கம் கண்டது.

சில்லறை பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் ரிசர்வ் வங்கி, கடந்த மாதம் முக்கிய கொள்கை விகிதங்களை 5.5 சதவிகிதமாக மாற்றாமல் வைத்திருந்தது.

நவம்பர் 2024 முதல் ஒன்பது மாதங்கள் வரை குறைந்து வந்த பணவீக்கம், ஆகஸ்ட் மாத சில்லறை பணவீக்கம் 2.07% ஆக உயர்ந்தது. இதற்கு காய்கறிகள், இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகிய பொருட்களின் விலைகள் அதிகரித்ததே காரணம்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ரூ.88.20 ஆக நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments