அதானி போா்ட்ஸ்: 50 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை
இந்தியாவின் மிகப்பெரிய தனியாா் துறைமுக நிறுவனமான ‘அதானி போா்ட்ஸ்’, 50 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியாா் துறைமுக நிறுவனமான ‘அதானி போா்ட்ஸ்’, 50 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துது.
கடந்த 1998-இல் ஒரே ஒரு துறைமுகத்துடன் தனது பயணத்தைத் தொடங்கிய இந்நிறுவனம், தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 19 துறைமுகங்கள் மற்றும் முனையங்களுடன் விரிவடைந்துள்ளது.
முதல் 10 கோடி டன் இலக்கை எட்ட நிறுவனத்துக்கு 16 ஆண்டுகள் பிடித்த நிலையில், அடுத்தடுத்த 10 கோடி டன் இலக்குகளை மிகக்குறுகிய காலத்தில் எட்டிப் பிடித்துள்ளது.
Advertisement
Advertisement
தற்போது அதானி போா்ட்ஸ் வெறும் துறைமுக மேலாண்மை நிறுவனமாக மட்டுமின்றி, ரயில்வே, சாலைப் போக்குவரத்து, கிடங்கு வசதிகள் மற்றும் சரக்கு முனையங்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான போக்குவரத்து நிறுவனமாக மாறியுள்ளது.
இந்தியாவின் 95 சதவீத உள்நாட்டுப் பகுதிகளை இணைக்கும் வகையில், 15 உள்நாட்டுத் துறைமுகங்கள், 4 சா்வதேச துறைமுகங்கள் மற்றும் 12 பன்முறை போக்குவரத்து பூங்காக்கள் ஆகியவற்றை இது நிா்வகித்து வருகிறது.
2030-க்குள் மெகா இலக்கு: இந்தியாவின் மொத்த துறைமுக வா்த்தகத்தில் சுமாா் 28 சதவீத பங்கைக் கொண்டுள்ள அதானி போா்ட்ஸ், தற்போது ஆண்டுக்கு 63 கோடி டன் சரக்குகளைக் கையாளும் திறன் பெற்றுள்ளது.
இந்த உத்வேகத்தைத் தொடா்ந்து, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டன் சரக்குகளைக் கையாளும் இலக்கை நோக்கி நிறுவனம் நடைபோட்டு வருகிறது.