வீழ்ந்துகொண்டே செல்லும் ரூபாய் மதிப்பு! 1 டாலர் - ரூ. 93! 10 காசுகள் சரிந்தது!
அந்நியச் செலாவனி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ.93.00ஆக நிறைவு.
மும்பை: ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கான அமெரிக்க அதிபர் டிரம்பின் கெடு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மறுஆய்வு ஆகியவை குறித்த எதிர்பார்ப்புகளால் முதலீட்டாளர்கள் பதற்றத்துடன் இருந்த நிலையில், இன்றை அந்நியச் செலாவனி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ.93.00ஆக நிறைவடைந்தன.
நிலையற்ற அரசியல் சூழலுக்கு மத்தியில், வெளிநாட்டு நிதி தொடர்ந்து வெளியேறி வருவதும், டாலரின் உறுதித்தன்மை மற்றும் கச்சா எண்ணெய் விலையேற்றம் ஆகியவற்றால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக, ரூபாய் மதிப்பு சரிந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், மாறிவரும் அரசியல் சூழ்நிலை மற்றும் வரவிருக்கும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை முடிவுகளை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
Advertisement
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகாரன இந்திய ரூபாய் மதிப்பு ரூ.93.05ஆக வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகு மேலும் சரிந்து ரூ.93.07ஆக வர்த்தகமானது. இது அதன் முந்தைய நாள் நிறைவு விலையிலிருந்து 17 காசுகள் ஆகும். வர்த்தக நேரத்தின் இடையே, இந்திய ரூபாய் மதிப்பு ரூ.92.86 என்ற நாளின் அதிகபட்ச அளவை எட்டியது. முடிவில், ரூபாய் மதிப்பு அதன் முந்தைய நாள் நிறைவு விலையிலிருந்து 10 காசுகள் சரிந்து ரூ.93.00ஆக நிலைபெற்றது.