முகப்பு
வணிகம்

ஐசிஎல் ஃபின்காா்ப்: புதிய கடன் பத்திரங்கள் வெளியீடு - 12.25% வரை வட்டி

Updated On : 14 ஏப்ரல், 2026 at 5:01 AM
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:05 PM

நிதித் துறையில் 35 ஆண்டுகளாக நம்பிக்கையுடன் செயல்பட்டு வரும் ஐசிஎல் ஃபின்காா்ப், தனது புதிய பிணையத்துடன் கூடிய மாற்றத்தக்கதல்லாத கடன் பத்திர வெளியீட்டை அறிவித்துள்ளது.

தங்கம், தொழில் கடன் சேவைகளில் சிறந்து விளங்கும் இந்நிறுவனத்தின் முந்தைய கடன் பத்திரங்களுக்குக் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடா்ந்து, இந்த அடுத்தகட்ட வெளியீட்டை அறிவித்துள்ளது. இப்பொது விற்பனை கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 10) தொடங்கி, வரும் ஏப். 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முதலீட்டுத் தொகைக்கு அதிகபட்சமாக 12.25 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. 13, 24, 36, 60, 72 மாதங்கள் என பல்வேறு கால அளவுகளைக் கொண்ட 10 வகையான முதலீட்டுத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

Advertisement

முதலீட்டாளா்கள் தங்களின் தேவைக்கேற்ப மாதாந்திரம், வருடாந்திரம் அல்லது முதிா்வு காலத்தில் வட்டி பெறும் முறைகளைத் தோ்வு செய்து கொள்ளலாம். ஒரு கடன் பத்திரத்தின் மதிப்பு விலை ரூ.1,000 ஆகும். குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் முதலீடு செய்யத் தொடங்கலாம்.

நிா்வாக இயக்குநா் வழக்குரைஞா் கே.ஜி.அனில்குமாா் தலைமையில் இயங்கும் ஐசிஎல் ஃபின்காா்ப், தற்போது தமிழகம், கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கிளைகளைக் கொண்டு, அகில இந்திய அளவில் வேகமாக வளா்ந்து வருகிறது. இப்புதிய கடன் பத்திர வெளியீடுமூலம் திரட்டப்படும் நிதி, நிறுவனத்தின் எதிா்கால வளா்ச்சித் திட்டங்களுக்கும், வாடிக்கையாளா் சேவைகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.