பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது! ஐடி பங்குகள் 3% சரிவு!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...
பங்குச்சந்தைகள் இன்று(ஏப். 22, புதன்கிழமை) கடும் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 79,019.34 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 535.64 புள்ளிகள் குறைந்து 78,737.69 புள்ளிகளில் நிலை பெற்றது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 135.60 புள்ளிகள் குறைந்து 24,441.00 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
Advertisement
சென்செக்ஸ் 30 பங்குகளில் ஹிந்துஸ்தான் யுனிலீவர், ட்ரெண்ட், என்டிபிசி, அல்ட்ரா சிமெண்ட், பஜாஜ் பைனான்ஸ், கோட்டக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ், பஜாஜ் பின்சர்வ், எட்டர்னல் ஆகியவை உயர்ந்தும் மற்ற நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகின.
நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.21 சதவீதம், 0.65 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகின்றன.
துறை வாரியாக, நிஃப்டி ஐடி பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன. நிஃப்டி சுகாதார சேவைகள், பார்மா, நிதி சேவைகள் உள்ளிட்ட துறைகளும் கடுமையான சரிவைச் சந்தித்து வரும் நிலையில் உலோகம், நுகர்வோர் பொருள்கள், ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கிகள் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.