பி.எம்.டபிள்யூ. நிறுவனம் எக்ஸ்3 30 எக்ஸ் எம் ஸ்போர்ட்ஸ் புரோ காரை இந்தியச் சந்தைகளில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆடம்பர கார்களின் வகைகளில் ஒன்றான பிஎம்டபிள்யூ தற்போது புது மாடலை இந்தியச் சந்தைகளில் பிப்ரவரி 16ல் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
எக்ஸ்3 30 எக்ஸ் எம் ஸ்போர்ட்ஸ் புரோ சிறப்பம்சங்கள் என்னென்ன?
2 லிட்டர் டிவிஎன் டர்போ 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றிருக்கும். இது அதிகபட்சமாக 258 எச்பி பவரை வெளிப்படுத்தும். 48வி மைல்டு சிஸ்டம், 8 ஸ்பீடு ஆடோமெட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.
இது 6.3 நிமிடத்தில் 100 கி.மீ வேகத்தை எட்டும். இது 20 xDrive M Sport மாடலை விட 1.5 வினாடிகள் வேகமானதாகும். வரவிருக்கும் இந்த X3 வேரியண்டின் லிட்டருக்கு 14.61 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சந்தையில் உள்ள எக்ஸ் 3 காரில் 2 வேரியண்ட்கள் உள்ளன. இதிலுள்ள என்ஜின் 197 எச்.பி. திறனை வெளிப்படுத்தக்கூடியது. எனவே, இதை விட திறன் மிகுந்ததாக புதிய கார் இருக்கும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.