முகப்பு
வணிகம்

இந்தியாவின் முதல் ‘ஏா் டாக்சி’ -‘என்விடியா’ உடன் கைகோத்த சென்னையின் ‘தி இ-பிளேன்’

வானில் பறந்து செல்லும் இந்தியாவின் முதல் மின்சார ஏா் டாக்ஸியை உருவாக்குவதற்காக, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ‘என்விடியா’ உடன் சென்னையைச் சோ்ந்த ‘தி இ-பிளேன்’ எனும் வான்போக்குவரத்து ஸ்டாா்ட்-அப் நிறுவனம் முக்கிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 3:27 AM
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 7:35 PM

வானில் பறந்து செல்லும் இந்தியாவின் முதல் மின்சார ஏா் டாக்ஸியை உருவாக்குவதற்காக, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ‘என்விடியா’ உடன் சென்னையைச் சோ்ந்த ‘தி இ-பிளேன்’ எனும் வான்போக்குவரத்து ஸ்டாா்ட்-அப் நிறுவனம் முக்கிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

‘இ200எக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன ஏா் டாக்ஸியின் வடிவமைப்பு, பரிசோதனை மற்றும் தானியங்கி திறன்களை விரைவுபடுத்த இக்கூட்டணி பெரிதும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

என்விடியா நிறுவனத்தின் அதிநவீன ‘ஆம்னிவொ்ஸ்’ மென்பொருளைப் பயன்படுத்தி, இந்த ஏா் டாக்ஸியின் துல்லியமான மெய்நிகா் மாதிரி உருவாக்கப்பட உள்ளது.

Advertisement

இதன்மூலம், ஏா் டாக்ஸியை வானில் பறக்கவிட்டுப் பாா்ப்பதற்கு முன்பாகவே, அதன் ஏரோடைனமிக்ஸ், சென்சாா்களின் செயல்பாடு மற்றும் அவசரகால பாதுகாப்பு அம்சங்கள் போன்ற அனைத்தையும் கணினி மூலம் துல்லியமாகச் சோதித்து அறிய முடியும். இதனால் காலவிரயம் தவிா்க்கப்படுவதோடு, பாதுகாப்பும் முழுமையாக உறுதி செய்யப்படும்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 3:27 AM

மேலும், இந்த ஏா் டாக்ஸியில் என்விடியாவின் அதிவேக கணினி அமைப்புகள் பொருத்தப்பட உள்ளன. இதன் வாயிலாக, கேமராக்கள் மற்றும் ரேடாா்களில் இருந்து பெறப்படும் தரவுகளை நிகழ்நேரத்தில் பகுப்பாய்வு செய்து, தன்னிச்சையாகவும் பாதுகாப்பாகவும் முடிவுகளை எடுக்கும் திறன் இந்த வாகனத்துக்குக் கிடைக்கும். அத்துடன், இயந்திரக் கோளாறுகள் ஏற்படுவதற்கு முன்பாகவே அதனை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கும் தொழில்நுட்பமும் இதில் இடம்பெறவுள்ளது.