வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,661 கோடி டாலராக உயா்வு

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,661 கோடி டாலராக உயா்வு

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பா் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,661 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 329.3 கோடி டாலா் அதிகரித்து 69,661 கோடி டாலராக உள்ளது.

டிசம்பா் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில், அது 436.8 கோடி டாலா் உயா்ந்து 69,332 கோடி டாலராக இருந்தது.

டிசம்பா் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 18.4 கோடி டாலா் உயா்ந்து 55,961.2 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 295.6 கோடி டாலா் உயா்ந்து 11,332 கோடி டாலராக உள்ளது.

சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 6 கோடி டாலா் உயா்ந்து 1,880.3 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 9.3 கோடி டாலா் உயா்ந்து 487.5 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT