டிசிஎஸ் 3வது காலாண்டு லாபம் 14% சரிவு!
நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ், டிசம்பர் வரையான காலாண்டில் அதன் நிகர லாபம் 13.91% சரிந்து ரூ.10,657 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
மும்பை: நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ், டிசம்பர் வரையான காலாண்டில் அதன் நிகர லாபம் 13.91% சரிந்து ரூ.10,657 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம், 2025 நிதியாண்டின் அக்டோபர் முதஸ் டிசம்பர் வரையான காலகட்டத்தில் ரூ.12,380 கோடியும், அதற்கு முந்தைய செப்டம்பர் வரையான காலாண்டில் ரூ.12,075 கோடியும் நிகர லாபமாக ஈட்டியிருந்தது.
மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் 4.86% அதிகரித்து, ரூ.63,973 கோடியிலிருந்து ரூ.67,087 கோடியாக உயர்ந்தது.
Advertisement
Advertisement
நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில், 3-வது காலாண்டில் செயல்பாட்டு லாப வரம்பு, செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 25.2% நிலையாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 24.5% விட அதிகம்.
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் டிசிஎஸ் பங்கின் விலை 0.86% உயர்ந்து ரூ.3,235.70ஆக நிறைவடைந்தன.
The country largest IT services company TCS reported 13.91 per cent decline in December quarter net profit at Rs 10,657 crore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.