வணிகம்

டிசிஎஸ் 3வது காலாண்டு லாபம் 14% சரிவு!

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ், டிசம்பர் வரையான காலாண்டில் அதன் நிகர லாபம் 13.91% சரிந்து ரூ.10,657 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ், டிசம்பர் வரையான காலாண்டில் அதன் நிகர லாபம் 13.91% சரிந்து ரூ.10,657 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.

டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம், 2025 நிதியாண்டின் அக்டோபர் முதஸ் டிசம்பர் வரையான காலகட்டத்தில் ரூ.12,380 கோடியும், அதற்கு முந்தைய செப்டம்பர் வரையான காலாண்டில் ரூ.12,075 கோடியும் நிகர லாபம் ஈட்டியிருந்தது.

மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் 4.86% அதிகரித்து, ரூ.63,973 கோடியிலிருந்து ரூ.67,087 கோடியாக உயர்ந்தது.

நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில், 3-வது காலாண்டில் செயல்பாட்டு லாப வரம்பு, செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 25.2% நிலையாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 24.5% விட அதிகம்.

இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் டிசிஎஸ் பங்கின் விலை 0.86% உயர்ந்து ரூ.3,235.70ஆக நிறைவடைந்தன.

The country largest IT services company TCS reported 13.91 per cent decline in December quarter net profit at Rs 10,657 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையில்லா போகி: ஆட்சியா் கோரிக்கை

ஊராட்சிச் செயலா்களின் தொடா் வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு

சமத்துவ பொங்கல் விழா

அம்மன் தாலி செயின் திருடிய இருவா் கைது

விஜய்யிடம் பொங்கலுக்குப் பின் மீண்டும் விசாரணை!

SCROLL FOR NEXT