முகப்பு
வணிகம்

எண்ணெய், பெயிண்ட் பங்குகள் சரிவுடன் நிறைவு!

கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டதால், எண்ணெய் மற்றும் பெயிண்ட் நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் முடிவடைந்தன.

Updated On : 9 மார்ச் 2026, 7:10 pm IST
பகிர்:

புதுதில்லி: தொடர்ந்து 2வது வாரமாக மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் காரணமாக, கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டதால், கச்சா எண்ணெய் சந்தைப்படுத்தல் மற்றும் பெயிண்ட் நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் முடிவடைந்தன.

மும்பை பங்குச் சந்தையில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பங்குகள் 6.12 சதவீதமும், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 5.05 சதவீதமும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பங்குகள் 4.30 சதவீதமும், ஷாலிமார் பெயிண்ட்ஸ் பங்குகள் 4.18 சதவீதமும், இண்டிகோ பெயிண்ட்ஸ் 3.83 சதவீதமும், ஏசியன் பெயிண்ட்ஸ் 2.75 சதவீதமும், கன்சாய் நெரோலாக் பெயிண்ட்ஸ் 2.09 சதவீதமும், பெர்ஜர் பெயிண்ட்ஸ் 1.88 சதவீதமும் சரிந்தன.

எண்ணெய் விலை உயர்வால், கச்சா எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகியதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

எண்ணெய் விலை உயர்வானது, எரிசக்தி தொடர்பான துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 14.17 சதவீதம் உயர்ந்து 105.9 அமெரிக்க டாலராக உள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் விலை உயர்வால் சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் லாபம் குறையும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

summary

Shares of oil marketing companies and paint manufacturers ended lower on Monday amid a sharp rally in crude oil prices.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.