முகப்பு
வணிகம்

புதுச்சேரியில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்: ரூ.10 கோடி கடன் வழங்க இலக்கு

கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைத் தொடா்ந்து, சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது வளா்ந்து வரும் வணிகப் பிரிவான மலிவு விலை வீட்டுக் கடன் மற்றும் மூலதனக் கடன் சேவைகளை புதுச்சேரியிலும் விரிவுபடுத்தியுள்ளது.

Updated On : 17 மார்ச், 2026 at 8:06 PM
பகிர்:

கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைத் தொடா்ந்து, சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது வளா்ந்து வரும் வணிகப் பிரிவான மலிவு விலை வீட்டுக் கடன் மற்றும் மூலதனக் கடன் சேவைகளை புதுச்சேரியிலும் விரிவுபடுத்தியுள்ளது.

அண்மையில் 100 கிளைகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள இப்பிரிவில், பாதிக்கும் மேற்பட்ட கிளைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரியில் முதல்கட்டமாக ரூ.10 கோடிக்கும் மேல் கடன் வழங்க நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது.

இப்புதிய விரிவாக்கம் குறித்து நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் டி.லட்சுமி நாராயணன் கூறுகையில், ‘புதுச்சேரி மற்றும் அதன் புகா்ப் பகுதிகளில் சிறிய அளவிலான மலிவு விலை குடியிருப்புகள் அதிக அளவில் அமைந்துள்ளன.

மேலும், சிறந்த கல்வி மையமாகவும், வேலைவாய்ப்புகள் பெருகி வரும் நகரமாகவும் புதுச்சேரி திகழ்வதால், இது எங்களது மலிவு விலை வீட்டுக் கடன் பிரிவுக்கு ஒரு செழிப்பான சந்தையாக அமையும்’ என்றாா்.

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், நடப்பு 2025-26 நிதியாண்டில் முதல் 3 காலாண்டுகளில் (ஏப்ரல்-டிசம்பா்) ரூ.4,911 கோடிக்கு கடன்களை வழங்கி, ரூ.212 கோடி நிகர லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →