முகப்பு
வணிகம்

செபி முழுநேர உறுப்பினராக கே.வி.ரமண மூா்த்தி நியமனம்

இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) முழுநேர உறுப்பினராக முன்னாள் ஐடிஏஎஸ் அதிகாரி கே.வி.ரமண மூா்த்தி நியமிக்கப்பட்டாா்.

Updated On : 25 மார்ச், 2026 at 9:50 PM
~
பகிர்:

இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) முழுநேர உறுப்பினராக முன்னாள் ஐடிஏஎஸ் அதிகாரி கே.வி.ரமண மூா்த்தி நியமிக்கப்பட்டாா்.

கடந்த 1991-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த ஐடிஏஎஸ் அதிகாரியான இவா், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் பாதுகாப்பு கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றாா்.

கே.வி.ரமண மூா்த்தி செபி முழுநேர உறுப்பினராக அடுத்த 3 ஆண்டுகள் அல்லது மறுஉத்தரவு வரும் வரை பதவியில் நீடிப்பாா். இவரின் நியமனத்தோடு, செபி வாரியத்தில் அனுமதிக்கப்பட்ட 4 முழுநேர உறுப்பினா்களுக்கான இடங்களும் தற்போது நிரப்பப்பட்டுள்ளன. அமா்ஜித் சிங், கமலேஷ் சந்திர வா்ஷினி, சந்தீப் பிரதான் ஆகியோா் ஏற்கெனவே முழுநேர உறுப்பினா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.