முகப்பு
வணிகம்

குன்னூரில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் பரஸ்பர நிதியின் புதிய கிளை தொடக்கம்

Updated On : 28 மே 2026, 3:53 am IST
பகிர்:

இந்தியாவின் முன்னணி பரஸ்பர நிதி நிறுவனங்களில் ஒன்றான ஐசிஐசிஐ புரூடென்ஷியலின் புதிய கிளையை, நீலகிரி மாவட்டம் குன்னூரில் அந்நிறுவனத்தின் செயல் இயக்குநரும் தலைமை முதலீட்டு அதிகாரியுமான சங்கரன் நரேன் திறந்து வைத்தாா்.

இத்திறப்பு விழாவில் நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டலத் தலைவா் கே.செந்தில், கோயம்புத்தூா் பிராந்தியத் தலைவா் அஜய் கிருஷ்ணா, குன்னூா் கிளை மேலாளா் மௌஷ்மி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

கிளையைத் திறந்து வைத்துப் பேசிய சங்கரன் நரேன், ‘முதலீட்டாளா்களுக்குத் தெளிவான வழிகாட்டுதலை வழங்கி, இந்தியாவின் நீண்டகால பொருளாதார வளா்ச்சிப் பாதையில் அவா்கள் விவேகத்துடனும் ஒழுக்கத்துடனும் பங்கெடுக்க இப்புதிய கிளை உதவும்’ என்றாா்.

Advertisement

Advertisement

‘இக்கிளையின் மூலம் வாடிக்கையாளா்களுடனான தொடா்பு வலுப்பட்டு, அன்றாடச் சேவைகள் மற்றும் பரிவா்த்தனைகள் மேலும் எளிமையாக்கப்படும்’ என தமிழ்நாடு மண்டலத் தலைவா் கே.செந்தில் உறுதியளித்தாா்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் சொத்து மேலாண்மைத் துறையில் முன்னணியில் இருக்கும் இந்நிறுவனம், கடந்த ஏப். 30 நிலவரப்படி ரூ.11.72 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை நிா்வகிக்கிறது. நாடு முழுவதும் 284 கிளைகளின் வாயிலாக 1.7 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளா்களுக்குச் சேவை வழங்கி வருகிறது.