தமிழ்நாடு

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

DIN

கொடைக்கானலில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
கொடைக்கானலில் தற்போது சீசன் முடிந்த நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா இடங்களான வெள்ளிநீர் வீழ்ச்சி, பியர் சோழா அருவி, பாம்பார் அருவி, மோயர் பாயிண்ட், பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக், பில்லர்ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, செட்டியார் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களில் சனிக்கிழமை அதிக அளவில் சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.
மேலும் பிற்பகலிலும், மாலையிலும் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் அதிக அளவில் குளிர்ச்சி நிலவியது. ஆனாலும் மழையை பொருள்படுத்தாமல் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரியும், ஏரிச்சாலையைச் சுற்றி சைக்கிள், குதிரை சவாரியும் செய்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது: தரைப் பகுதியில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே கொடைக்கானனலில் மிதமான சீசன் நிலவுவதால் வந்துள்ளோம். மேகமூட்டம், இயற்கைக் காட்சிகள், அருவிகள் மனதுக்கு இதமளிக்கிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT