அரசியல் அரங்கம்

மோடியை சமாதானப்படுத்திய அமித் ஷா!

தமிழகத்தில் பாஜக தலைமையில் வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணியைக் கட்டமைப்பதிலும், பெரிய கட்சிகளைத் தங்களது அணிக்குக் கொண்டு வருவதிலும் மாநிலத் தலைமை தோல்வி அடைந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவது பிரதமர் நரேந்திர மோடியை கவலையடைச் செய்துள்ளது.

தினமணி

தமிழகத்தில் பாஜக தலைமையில் வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணியைக் கட்டமைப்பதிலும், பெரிய கட்சிகளைத் தங்களது அணிக்குக் கொண்டு வருவதிலும் மாநிலத் தலைமை தோல்வி அடைந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவது பிரதமர் நரேந்திர மோடியை கவலையடைச் செய்துள்ளது. இதனால் தமிழகம், கேரளம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லப் போவதில்லை என்று அண்மையில் நடந்த பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் அமித் ஷாவிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அமித் ஷா, மோடியைச் சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினார். கேரளத்தில் மந்த நிலையில் இருந்த பாஜக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்ட அமித் ஷா, வரும் 9-ஆம் தேதி அந்த மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாநிலத் தலைமைக்கு உத்தரவிட்டார்.

தான் பிரசாரத்துக்குப் போயும்கூட, போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் "டெபாசிட்' கூடப் பெற முடியாமல் போனால், அகில இந்திய அளவில் தனது "இமேஜ்' கடுமையாகப் பாதிக்கப்படும் என்கிற கவலை பிரதமருக்கு. அதனால்தான், கட்சி அமைப்பு பலவீனமாக உள்ள தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள நரேந்திர மோடி தயங்குவதாகத் தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்திலும் கட்சியின் தேர்தல் ஏற்பாடுகளை தீவிரப்படுத்த அவர் மாநிலத் தலைமைக்கு அறிவுறுத்திய பிறகு மீண்டும் பிரதமரைச் சமாதானப்படுத்தினார். இதனால் மனமிறங்கிய மோடி கேரளம், தமிழகத்தில் கட்சியின் தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கிய பிறகு, தலா ஒரு முறை மட்டும் பிரசாரத்துக்கு வருவதாக மோடி தெரிவித்தார்.

தமிழகம், கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு மோடி வந்து சென்றால் அது கட்சித் தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் என்று அமித் ஷா நம்புகிறார். ஆனால், அது எந்த அளவுக்கு வெற்றிக்கு வழிவகுக்கும் எனத் தெரியாமல் கவலையில் உள்ளனர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள மாநில பாஜக பிரமுகர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

வெள்ளத்தால் உருக்குலைந்த கிராமம்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Uttarakhand | Cloud Burst

சிவகார்த்திகேயன் குரலில் ஓ காட் ஃபியூட்டிஃபுல் பாடல்!

இந்தியாவுக்கு மேலும் 25%... மொத்தம் 50% வரி: டிரம்ப்

SCROLL FOR NEXT