இனிப்பு வகைகள்

பாசிப்பருப்பு நெய் உருண்டை

பாசிப் பருப்பை வாணலியில் லேசாக வறுக்கவேண்டும். வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது.

தவநிதி


தேவையானவை:
பாசிப் பருப்பு - 2 கிண்ணம்
சர்க்கரை - 2 கிண்ணம்
நெய் -  200 கிராம்
ஏலக்காய் - 6
முந்திரி உடைத்தது - 50 கிராம்

செய்முறை:  பாசிப் பருப்பை வாணலியில் லேசாக வறுக்கவேண்டும். வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது.

வறுத்த பருப்பை மிக்சியில் அரைக்கவும். அதனை  சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும். அதேபோன்று சர்க்கரையையும் மிக்சியில் அரைத்து,  பாசிப் பருப்பு மாவுடன் சேர்த்து கலக்கவும்.  அதனுடன் ஏலக்காயைப் பொடித்து  சேர்க்கவும்.

முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு  கலந்து  கொள்ளவும்.

பின்னர் வாணலியில் 200 கிராம் நெய்யை லேசாக உருக்கி அதை மாவில் ஊற்றவும்.  மாவை நன்கு கலந்து வெது வெதுப்பான சூட்டிலேயே கையால்  லட்டு பிடிக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT