முகப்பு
இனிப்பு வகைகள்

ரவா லட்டு

அகலமான வாணலியில் நெய்யை ஊற்றி அதில் முந்திரி திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

Updated On : 2 செப்டம்பர், 2016 at 12:55 PM
பகிர்:


தேவையானவை:
ரவை - ஒரு கிண்ணம்
நெய் - 4 தேக்கரண்டி
சர்க்கரை - அரை கிண்ணம்
தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்
ஏலக்காய் பொடி செய்தது - கால் தேக்கரண்டி
நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி - 10
சூடான பசும்பால் - அரை கப்

செய்முறை: 
அகலமான வாணலியில் நெய்யை ஊற்றி அதில் முந்திரி திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

அதே நெய்யில் ரவையைப் போட்டு  நன்றாக வறுத்து அகலமான பாத்திரத்தில் கொட்டவும். ரவையில் வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல், பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும். 

இதில்  காய்ச்சிய பசும்பாலை மிதமான சூட்டில் சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும். உருண்டை பிடிக்கும் அளவுக்கு பால் ஊற்றினால் போதும்.

Advertisement

பின்னர் நமக்கு தேவையான  அளவில் உருண்டை பிடித்து வைக்கலாம்.
சாப்பிட சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.