தேவையான பொருட்கள்
தூதுவளை கீரை - 1 கட்டு
புதினா - தேவைக்கேற்அ
கொத்தமல்லி - தேவைக்கேற்ப
செய்முறை
கட்டு கீரையை எடுத்து நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கி,அதனுடன் சாம்பார் வெங்காயம், சீரகம், மல்லி , இவைகளை தேவையான அளவு எடுத்துவைத்து விட்டு, தேவையான சமையல் எண்ணெய் ஊற்றிய வாணலியை எரியும் அடுப்பின் மீது வைத்து அது கொதிவரும் போது,கறிவேப்பிலையுடன் சிறிது கடுகு போட அது பொரியும் அப்போது வானலிக்குள் எடுத்து வைத்துள்ள கீரை, வெங்காயம், சீரகம்,மல்லி, தேங்காய் துறுவல் இவைகளை வாணலிக்குள் போட்டு தாளிக்க வேண்டும்,
ஐந்து நிமிடங்கள் கழித்து ,தாளித்த பொருட்களை எடுத்து தேவையான உப்புகலந்து ‘மிக்ஸியில்’ இட்டு அரைக்க கெட்டியான பச்சை நிற சட்னி கிடைக்கும்.
தூதுவளை ,புதினா, கொத்தமல்லி ஆகிய மருத்துவ குணம் கொண்ட கீரை சட்னிகள், இட்லிக்குத் தோதான சட்னியாக விளங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.