தேவையானவை:
தினை மாவு - 1/2 கிண்ணம்
சோள மாவு - 1/2 கிண்ணம்
உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - 2
இஞ்சி விழுது - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிது
பச்சை மிளகாய் - 1
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு - சிறிது
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இத்துடன் மசித்த கிழங்கு, உப்பு, மஞ்சள்தூள், கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
தினை மாவு மற்றும் சோளமாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து அத்துடன் சிறிது உப்பு, மிளகாய்த்தூள், ஆப்ப சோடா சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர்விட்டு கலந்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்தவுடன் உருளைக்கிழங்கு மசாலா உருண்டைகளை, மாவில் தோய்த்து எண்ணெய்யில் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.