ஆலங்குளம் சுற்று வட்டாரத்தில் இருந்து நல்லூருக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்றுவருகின்றனர். அவர்கள் நடந்தும், சைக்கிள், பஸ்களிலும் சென்றுவருகின்றனர். இந்த வழித்தடத்தில் பல ஆலைகள் உள்ளதால் கனரக வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் செல்லும்.
குறுகிய இச் சாலையில் போக்குவரத்து நெரிசலும் அதிகம் என்பதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. எனவே சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.