குடிநீர் இணைப்பு வழங்கப்படுமா?
ஆவடி நகராட்சிப் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதி செக்டர் 1 மற்றும்
ஆவடி நகராட்சிப் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதி செக்டர் 1 மற்றும் 2-ல் சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஒரு வீட்டிற்கு குடிநீர், கழிவுநீர் இணைப்பு வழங்க தலா ரூ.10,000 வாங்கினர். ஆனால், இதுவரை குடிநீர் குழாய் பதிந்து வீடுகளுக்கு இணைப்பு வழங்கவில்லை.
இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், தனியார் லாரி மூலம் வழங்கப்பட்ட குடிநீரும் கடந்த ஒருவாரமாக நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்கு பொதுமக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.