குடிநீர் விநியோகம் தேவை!
திருவான்மியூர் மேற்கு காமராஜ் நகர் பகுதிக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு
திருவான்மியூர் மேற்கு காமராஜ் நகர் பகுதிக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் சமீபகாலமாக குடிநீர் விநியோகம் சரிவர வருவதில்லை. இது சம்மந்தமாக சென்னை குடிநீர் வழங்கல் அதிகாரிகளிடம் பொதுமக்கள் பல முறை புகார் செய்தும் இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை. பொதுமக்கள் நலன்கருதி குடிநீர் வழங்கல் அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ரமேஷ்,
திருவான்மியூர்.