முகப்பு
இந்தியா

மார்ச் 16-ல் தமிழகம், கேரளம், மே.வங்கம் சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு?

மார்ச் 16-ல் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு...

Updated On : 12 மார்ச், 2026 at 3:50 PM
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா்.
பகிர்:

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான தேதிகளை வரும் மார்ச் 16 அன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நிகழாண்டில் (2026) சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்கள் அனைத்தும் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வரும் திங்கள்கிழமை (மார்ச் 16) அறிவிக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் எனவும், முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் மாதத்தின் 2 அல்லது 3 ஆவது வாரத்தில் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

summary

ECI expected to announce the assembly election dates for Tamil Nadu, Kerala, and West Bengal on March 16.

முழு கட்டுரையைப் படிக்க →