நங்கநல்லூர் 1-ஆவது பிரதான சாலைப் பகுதியில் உள்ள தெருக்களில் இருபுறமும் கார்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக தண்ணீர் லாரிகள் தெருக்களுக்குள் செல்ல முடிவதில்லை. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் குடி தண்ணீர் பிடிக்க சிரமப்படுகிறார்கள். பெண்கள் நீண்ட தூரம் நடந்து சென்று மெயின் ரோட்டில் நிறுத்தப்படும் லாரியில் குடிநீர் பிடித்து வரவேண்டியுள்ளது. மேலும் அவசரகாலத்தில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் தெருக்களுக்குள் செல்ல சிரமப்பட
வேண்டியுள்ளது. எனவே, கார் போன்ற வாகனங்களை நிறுத்த,வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மாநகராட்சிக்கு வருமானமும் கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.