பகுதி - 92
சேவல் விருத்தத்தில் இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் ஐந்தாம் பாடலும் ‘பில்லி சூனியம் பெரும்பகையகல, வல்ல பூதம் வலாட்டிகப் பேய்களும்
சேவல் விருத்தத்தில் இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் ஐந்தாம் பாடலும் ‘பில்லி சூனியம் பெரும்பகையகல, வல்ல பூதம் வலாட்டிகப் பேய்களும்….. அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட’ என்ற சஷ்டி கவசத்துக்கு முன்னோடியாக அமைந்திருக்கிறது. பொதுவாக எல்லோருக்குமே நலம் பயப்பது என்றாலும், பில்லி சூனியம், பேய்-பிசாசு பற்றிய கவலை உள்ளவர்களுக்குத் துணை நிற்பது என்று இதனால்தான் சேவல் விருத்தம் உறுதியாக நம்பப்படுகிறது.
இது ஐந்தாம் பாடல்
தானா யிடும்புசெயு மோகினி இடாகினி
தரித்தவே தாளபூதம்
Advertisement
சருவசூ னியமுமங் கிரியினா லுதறித்
தடிந்துசந் தோடமுறவே
கோனாகி மகவானும் வானாள வானாடர்
குலவுசிறை மீளஅட்ட
குலகிரிகள் அசுரர்கிளை பொடியாக வெஞ்சிறைகள்
கொட்டியெட் டிக்கூவுமாம்
மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு
மாதேவ னற்குருபரன்
வானீரம் அவனியழல் காலாய் நவக்கிரகம்
வாழ்நாள் அனைத்தும் அவனாம்
சேனா பதித்தலைவன் வேதா வினைச்சிறைசெய்
தேவாதி கட்கரசுகட்
டேனான மைக்கடலின் மீனான வற்கினியன்
சேவற் றிருத்து வசமே.
</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/237786068&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p> </p>