பகுதி - 18
முருகா, எனக்கோ உன்னை தினந்தோறும் தொழும் பழக்கமே இல்லை.
நேற்றைய பாடலின் பொருளை இப்போது பார்ப்போம்.
</p><p align="JUSTIFY"><strong>உனைத்தி னந்தொழு திலன்</strong> - முருகா, எனக்கோ உன்னை தினந்தோறும் தொழும் பழக்கமே இல்லை.</p><p align="JUSTIFY"><strong>உனதியல்பினை உரைத்திலன்</strong> - (செயலால் தொழுதும் இல்லை), உன்னுடைய இயல்பை (மனத்தால் எண்ணிப் பார்த்து, உணர்ந்து அதைப் பிறரும் உணருமாறு) எடுத்துச் சொல்லும் தன்மையும் இல்லை.</p><p align="JUSTIFY"><strong>பல மலர்கொடுன் அடியிணை</strong> - (இவைதான் இல்லையென்றாலும், மிக எளிமையாகச் செய்யக்கூடிய செயலாகிய) பல மலர்களைக் கொண்டு உன் இரண்டு பாதங்களிலும் (தூவி)</p><p align="JUSTIFY"><strong>உறப்ப ணிந்திலன்</strong> - (பூமியில் என் உடல் படியுமாறு) பொருந்த (உன் பாதத்தில் வீழ்ந்து) வணங்கவுமில்லை.</p><p align="JUSTIFY"><strong>ஒருதவ மிலன்</strong> - நான் எந்த வகையான தவமும் (முயற்சியும்) இல்லாதவன். (இவையெல்லாம் இருக்கட்டும்)</p><p align="JUSTIFY"><strong>உனதருள்மாறா உளத்து ளன்பினர்</strong> - (நான்தான் இவற்றையெல்லாம் செய்யவில்லை என்றாலும்) உன் அருளை எப்போதும் மறவாதவர்களும் உள்ளத்தினுள்ளே உன்பால் அன்பு நிறைந்தவர்களுமான (அடியவர்கள்)</p><p align="JUSTIFY"><strong>உறைவிடம் அறிகிலன்</strong> - எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதைக்கூட அறியாதவன் நான்.</p><p align="JUSTIFY"><strong>விருப்பொடுன் சிகரமும்வலம் வருகிலன்</strong> - (மனத்திலே பொங்கும்) ஆர்வத்தோடு உன் மலையை வலம்வருவதும் இல்லை. நான் கிரிவலம் செய்வதில்லை.</p><p align="JUSTIFY"><strong>உவப்பொடுன்புகழ் துதிசெய</strong> - உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க, உன் புகழைப் பாடி உன்னைத் துதிக்கும்</p><p align="JUSTIFY"><strong>விழைகிலன்</strong> - விருப்பமும் என்னிடத்தில் இல்லை.</p><p align="JUSTIFY">இப்படியெல்லாம் இருக்கும்போது, முருகா,</p><p align="JUSTIFY"><strong>மலைபோலே கனைத்தெ ழும்பகடது</strong> - மலைபோன்ற பெரிய உருவத்துடன் கனைத்துக் கொண்டு வரும் எருமையின் (பகடு: எருமை)</p><p align="JUSTIFY"><strong>பிடர் மிசைவரு</strong> - கழுத்திலே அமர்ந்தபடி வருபவரான,</p><p align="JUSTIFY"><strong>கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்</strong> - கரிய நிறத்தையும் கடுங்கோபத்தையும் உடைய யமனுடைய அருகிலிருப்பவர்கள் (உழையினர் என்பது இந்த இடத்தில் [யமனுக்கு] அருகிருப்பவர்கள், யமதூதர்கள் என்று பொருள்படும்).</p><p align="JUSTIFY"><strong>கதித்து அடர்ந்து எறி கயிறு</strong> - (யமதூதர்கள் என்முன்னே) தோன்றி, கோபித்து வீசுகின்ற பாசக்கயிறு,</p><p align="JUSTIFY"><strong>அடுகதைகொடு பொருபோதே</strong> - துன்பத்தைத் தருவதான கதாயுதம் போன்றவற்றைக் கொண்டு (என் உயிரைப் பறிப்பதற்காக) என்னோடு போரிடும் சமயத்தில்,</p><p align="JUSTIFY"><strong>கலக்கு றுஞ்செயல்</strong> - என் மனமோ கலக்கம் எனும் செயலில் இறங்கும்;</p><p align="JUSTIFY"><strong>ஒழிவற அழிவுறு</strong> - அழியப்போகிறோம் என்ற எண்ணம் ஓயாமல் எழும் (நான் அவ்வாறு)</p><p align="JUSTIFY"><strong>நைந்து அலம் உறுபொழுது</strong> - நைந்து போய், துன்பப்படும் சமயத்தில் (அலம்<strong>:</strong> துன்பம்)</p><p align="JUSTIFY"><strong>அளவைகொள் கணத்தில்</strong> - ஒரு கணப்போதிலே</p><p align="JUSTIFY"><strong>என்பய மற</strong> - என் பயம் கெடும்படியாக (யாமிருக்க பயமேன் என்று சொன்ன வண்ணம்)</p><p align="JUSTIFY"><strong>மயில் முதுகினில் வருவாயே</strong> - நீ மயிலின் முதுகில் அமர்ந்த கோலமாய் என் முன்னே வர வேண்டும்.</p><p align="JUSTIFY">எப்போதும் போல இரண்டாம் அடியில் கோரிக்கை முடிந்தது. பின்னிரண்டு அடிகள், முருகனைத் துதிக்கின்றன. அவன் போர்செய்த</p><p align="JUSTIFY"><strong>வினைத்தலந்தனில்</strong> – போர்க்களத்தில்</p><p align="JUSTIFY"><strong>அலகைகள் குதிகொள</strong> - பேய்கள் குதித்துக் கூத்தாட (அலகை -<strong> </strong>பேய்)<br /><br /><strong>விழுக்கு உ டைந்துமெய் உகுதசை</strong> - (விழுக்கு -<strong> </strong>ஊன்) ஊன் கிழிபட்டு உடலிலிருந்து சிதறிவிழும் மாமிசத்தை,</p><p align="JUSTIFY"><strong>கழுகுண</strong> - கழுகுகள் உண்ணவும்</p><p align="JUSTIFY"><strong>விரித்த குஞ்சியர் எனும்</strong> - தலைவிரி கோலமாக, முடியவிழ்ந்து விழுந்து கிடப்பவர்களான</p><p align="JUSTIFY"><strong>அவுணரை அமர்புரிவேலா</strong> - அசுரர்களோடு போர் புரிந்த வேலனே,</p><p align="JUSTIFY"><strong>மிகுத்த பண்பயில் குயில்மொழி</strong> - பலவிதமான பண்களில் (ராகங்களில்) பாடுபவளால குயிலை ஒத்த குரலை உடையவளும்,</p><p align="JUSTIFY"><strong>அழகிய கொடிச்சி</strong> - அழகானவள், கொடிபோன்றவளான (வள்ளியின்</p><p align="JUSTIFY"><strong>குங்கும முலைமுகடு</strong> <strong>உழு -</strong> குங்குமக் கலவையைப் பூசிய மார்பில் எழுதப்பட்ட,<br /><br /><strong>நறை விரைத்த சந்தன ம்ருகமத</strong> - நறைவிரைத்த - வாசனை கமழ்கின்ற; சந்தனம்; ம்ருகமதம்: கஸ்தூரி (ஆகிய வாசனைப் பொருட்களைப் பூசிய)</p><p align="JUSTIFY"><strong>புயவரை உடையோனே</strong> - மலை போன்ற தோள்களை உடையவனே,</p><p align="JUSTIFY"><strong>தினத்தினஞ் சதுர்மறைமுநி முறைகொடு</strong> - நான்கு வேதங்களிலும் (வல்லவனான) முனி—முனிவன், பிரமன், தினந்தோறும் முறைப்படி,</p><p align="JUSTIFY"><strong>புனற்சொரிந்து அலர் பொதிய</strong> - நீரைப் பொழிந்து அபிஷேகம் செய்தும் அலர்ப்பொதிய: ஏராளமான மலர்களால் அர்ச்சித்தும்,</p><p align="JUSTIFY"><strong>விணவரொடு</strong> - (விண்ணவரோடு என்பது விணவரோடு என்று விகாரமாயிற்று) தேவர்களும்</p><p align="JUSTIFY"><strong>சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ</strong> - கோபத்தைக் கோபித்த (கோபத்தை ஒழித்த) முனிவரர்கள் தொழவும்</p><p align="JUSTIFY"><strong>மகிழ்வோனே</strong> - (அந்த வழிபாட்டில்) மனம் மகிழ்பவனே</p><p align="JUSTIFY"><strong>தெனத்தெனந்தன என</strong> - தெனத்தெனந்தன என்ற சப்தத்துடன் (சுழன்று பறக்கும்)<br /><br /><strong>வரி யளிநறை தெவிட்ட</strong> – வரிஅளி - வரிவண்டு; நறை - தேன். வரிவண்டுகள் திகட்டிப்போகும் அளவுக்குத் தேனை,</p><p align="JUSTIFY"><strong>அன்பொடு பருகு</strong> - ஆசையுடன் குடிப்பதாகிய</p><p align="JUSTIFY"><strong>உயர் பொழில்திகழ்</strong> - உயர்ந்த சோலைகள் விளங்கும்</p><p align="JUSTIFY"><strong>திருப் பரங்கிரி தனிலுறை</strong> - திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும்</p><p align="JUSTIFY"><strong>சரவண பெருமாளே </strong>- சரவண மூர்த்தியே.</p><p align="JUSTIFY">முருகா, நான் செய்ய வேண்டிய எதையும் செய்யவில்லை. நான் எதைச் செய்ய மறந்தாலும், நீ என் இறுதி நேரத்தில் மயில்மேல் அமர்ந்த கோலத்தில் வந்து காட்சி தர வேண்டும். இதை நீ மறந்துவிடாதே!</p>