முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 25

இன்றைய பாடல், திருவேரகம் எனப்படும் சுவாமிமலைத் திருப்புகழ். திருப்புகழ் அன்பர்கள் பெரிதும் உவக்கும் பாடல்களில் இதுவுமொன்று. என்னுள்ளம் உருகிடும்படியாக திருச்சபையில் வந்து காட்சி கொடுத்தருள வேண்டும் என்று பாடுகிறார்.

Updated On : 8 அக்டோபர், 2015 at 7:58 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:26 PM

இன்றைய பாடல், திருவேரகம் எனப்படும் சுவாமிமலைத் திருப்புகழ். திருப்புகழ் அன்பர்கள் பெரிதும் உவக்கும் பாடல்களில் இதுவுமொன்று. என்னுள்ளம் உருகிடும்படியாக திருச்சபையில் வந்து காட்சி கொடுத்தருள வேண்டும் என்று பாடுகிறார்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்றார் வள்ளுவர். அன்பென்ற நீர்ப்பொருளை அடைப்பதற்கான தாழ்மரம் (Sluice gate) எதுவுமில்லை. அந்த அன்புதான் கண்ணில் சிறுதிவலை நீராக வெளிப்படுகிறது என்றார். அருணகிரிநாதருடைய அன்பு வெளிப்படுவதோ சிறு திவலையாக இல்லை, குதித்துப் பாயும் வெள்ளமாக வருகிறது. பாடலில், ‘புளகிதம் எழ, இருவிழி புனல் குதிபாய’ என்று வரும் இடம் அன்பர்களால் பெரிதும் உவந்து பேசப்படும் இடங்களில் ஒன்று. கண்ணிலிருந்து நீர் குதித்துப் புறப்பட்டுப் பாய்கிறதாம். இவருடைய ஆர்வம் கண்ணீராக குதிபோட்டுக் கொண்டு பீறிட்டு வெளிப்பட, இறைவன் எப்படிக் காட்சியளிக்க வேண்டும் என்பதைச் சொல்கிறார்.

பாடலை இன்று படித்துக் கேளுங்கள். பொருளை நாளைக்கு விரிவாகப் பார்க்கலாம்.

Advertisement

 தந்தத் தனதன தனதன தனதன

 தந்தத் தனதன தனதன தனதன

 தந்தத் தனதன தனதன தனதன தனதான

 எந்தத் திகையினு மலையினு முவரியி

 னெந்தப் படியினு முகடினு முளபல

 எந்தச் சடலமு முயிரியை பிறவியி னுழலாதே

 இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி

 னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு

 என்சித் தமுமன முருகிநல் சுருதியின் முறையோடே

 சந்தித் தரஹர சிவசிவ சரணென

 கும்பிட் டிணையடி யவையென தலைமிசை

 தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் குதிபாயச்

 சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு

 னந்தத் திருநட மிடுசர ணழகுற

 சந்தச் சபைதனி லெனதுள முருகவும் வருவாயே

 தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி

 தந்தத் தனதன டுடுடுடு டமடம

 துங்கத் திசைமலை யுவரியு மறுகச லரிபேரி

 துன்றச் சிலைமணி கலகல கலினென

 சிந்தத் சுரர்மல ரயன்மறை புகழ்தர

 துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு மயில்வேலா

 கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி

 யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத

 கந்தப் பரிமள தனகிரி யுமையரு ளிளையோனே

 கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்

 அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்

 கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய பெருமாளே.

</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.