பகுதி - 25
இன்றைய பாடல், திருவேரகம் எனப்படும் சுவாமிமலைத் திருப்புகழ். திருப்புகழ் அன்பர்கள் பெரிதும் உவக்கும் பாடல்களில் இதுவுமொன்று. என்னுள்ளம் உருகிடும்படியாக திருச்சபையில் வந்து காட்சி கொடுத்தருள வேண்டும் என்று பாடுகிறார்.
இன்றைய பாடல், திருவேரகம் எனப்படும் சுவாமிமலைத் திருப்புகழ். திருப்புகழ் அன்பர்கள் பெரிதும் உவக்கும் பாடல்களில் இதுவுமொன்று. என்னுள்ளம் உருகிடும்படியாக திருச்சபையில் வந்து காட்சி கொடுத்தருள வேண்டும் என்று பாடுகிறார்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்றார் வள்ளுவர். அன்பென்ற நீர்ப்பொருளை அடைப்பதற்கான தாழ்மரம் (Sluice gate) எதுவுமில்லை. அந்த அன்புதான் கண்ணில் சிறுதிவலை நீராக வெளிப்படுகிறது என்றார். அருணகிரிநாதருடைய அன்பு வெளிப்படுவதோ சிறு திவலையாக இல்லை, குதித்துப் பாயும் வெள்ளமாக வருகிறது. பாடலில், ‘புளகிதம் எழ, இருவிழி புனல் குதிபாய’ என்று வரும் இடம் அன்பர்களால் பெரிதும் உவந்து பேசப்படும் இடங்களில் ஒன்று. கண்ணிலிருந்து நீர் குதித்துப் புறப்பட்டுப் பாய்கிறதாம். இவருடைய ஆர்வம் கண்ணீராக குதிபோட்டுக் கொண்டு பீறிட்டு வெளிப்பட, இறைவன் எப்படிக் காட்சியளிக்க வேண்டும் என்பதைச் சொல்கிறார்.
பாடலை இன்று படித்துக் கேளுங்கள். பொருளை நாளைக்கு விரிவாகப் பார்க்கலாம்.
Advertisement
தந்தத் தனதன தனதன தனதன
தந்தத் தனதன தனதன தனதன
தந்தத் தனதன தனதன தனதன தனதான
எந்தத் திகையினு மலையினு முவரியி
னெந்தப் படியினு முகடினு முளபல
எந்தச் சடலமு முயிரியை பிறவியி னுழலாதே
இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி
னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு
என்சித் தமுமன முருகிநல் சுருதியின் முறையோடே
சந்தித் தரஹர சிவசிவ சரணென
கும்பிட் டிணையடி யவையென தலைமிசை
தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் குதிபாயச்
சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு
னந்தத் திருநட மிடுசர ணழகுற
சந்தச் சபைதனி லெனதுள முருகவும் வருவாயே
தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி
தந்தத் தனதன டுடுடுடு டமடம
துங்கத் திசைமலை யுவரியு மறுகச லரிபேரி
துன்றச் சிலைமணி கலகல கலினென
சிந்தத் சுரர்மல ரயன்மறை புகழ்தர
துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு மயில்வேலா
கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி
யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத
கந்தப் பரிமள தனகிரி யுமையரு ளிளையோனே
கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்
கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய பெருமாளே.
</p>