முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 35

சரஸ்வதி பூஜையும் ஆயுத பூஜையுமான இன்று, இருபத்தைந்து திருவகுப்புகளில் இரண்டாவதான தேவேந்திர சங்க வகுப்பைப் பார்ப்போம், கேட்போம்.

Updated On : 19 அக்டோபர், 2015 at 3:27 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:31 PM

சரஸ்வதி பூஜையும் ஆயுத பூஜையுமான இன்று, இருபத்தைந்து திருவகுப்புகளில் இரண்டாவதான தேவேந்திர சங்க வகுப்பைப் பார்ப்போம், கேட்போம். திருவகுப்புகளில் பிறவற்றிலும் அம்பிகையைப் பெரிதும் புகழ்ந்து சாக்தர்களையே விஞ்சுகிறார் என்றாலும், தேவேந்திர சங்கவகுப்பில், அம்பிகையை நாராயணியாகவே, நரசிம்மியாகவே பாடுகிறார். வேகமும் கனமும் உக்கிரமும் நிறைந்த பாடல் இது. கேட்கும்போதுதான் இதன் வேகம் தெரியும்.

மணிமந்திர ஔஷதத்தில் இது மந்திரம் போன்றது என்றும், ஸ்ரீவித்யாவில் மிகவும் சிறப்பான சாம்பவி முத்திரை இந்தப் பாடலில் அமைந்திருக்கிறது என்று;ம வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் கூறுவாராம். இங்கே காணவும்: http://kaumaram.com/vaguppu/vgp02.html

நீளமான பாடல். இன்று பாடலை மட்டும் பார்ப்போம். வழக்கம் போல இரண்டு வேகங்களில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடவே படித்து மனனம் செய்ய விரும்புவோர் பயன்படுத்திக்கொள்ளவும்.

Advertisement

தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன
தானாந்தன தந்தன தானாந்தன தந்தன

தரணியி லரணிய முரணிர ணியனுடல்
தனைநக நுதிகொடு
சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி

தமருக பரிபுர ஒலிகொடு நடநவில்
சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை

சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள்
சததள முகுளித
தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை

தருபதி சுரரொடு சருவிய அசுரர்கள்
தடமணி முடிபொடி
தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி

இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள
கிதவிள முலையிள
நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள்

இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர்
எனதுயிர் கொளவரின்
யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில்

இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட
விடுமன கரதல
ஏகாம்பரை யிந்திரை மோகாங்கசு மங்கலை

எழுதிய படமென இருளறு சுடரடி
யிணைதொழு மவுனிகள்
ஏகாந்தசு கந்தரு பாசாங்குச சுந்தரி

கரணமு மரணமு மலமொடு முடல்படு
கடுவினை கெடநினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ்

கனலெரி கணபண குணமணி யணிபணி
கனவளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள்

கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி
கவுரிக மலைகுழை
காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு

கரைபொழி திருமுக கருணையி லுலகெழு
கடனிலை பெறவளர்
காவேந்திய பைங்கிளி மாசாம்மவி தந்தவன்

அரணெடு மடமரை யடியொடு பொடிபட
அலைகடல் கெடஅயில்
வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கு மரன்குகன்

அறுமுக னொருபதொ டிருபுய னபிநவ
னழகிய குறமகள்
தார்வேய்ந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன்

அடன்மிகு கடதட விகடித மதகளி
றனவர தமுமக
லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில்

அதிபதி யெனவரு பொருதிறல் முருகனை
அருள்பட மொழிபவர்
ஆராய்ந்துவ ணங்குவர் தேவேந்திர சங்கமே.

பொருளை நாளைக்குக் காண்போம்.

</p><p align="JUSTIFY"><iframe src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/228794920&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" style="width: 400px; height: 268px" /></p><p> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.