பகுதி - 220
இடைக்கழி என்றும் குராவடி என்றும் குறிப்பிடப்படும் திருவிடைக்கழித் திருத்தலத்துக்கான பாடல்
இடைக்கழி என்றும் குராவடி என்றும் குறிப்பிடப்படும் திருவிடைக்கழித் திருத்தலத்துக்கான பாடல் இது. திருக்கடவூரிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், தில்லையாடியிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுமுள்ள தலம். இந்தத் தலத்தில் முருகன் திருக்குரா மர நிழலில் வீற்றிருக்கிறான். பாலசுப்பிரமணியன் என்பது இறைவன் நாமம். இறைவன் தேவானை சகிதமாக எழுந்தருளியிருக்கிறான். வள்ளியம்மை இல்லை. முருகனுக்கும் தேவானைக்கும் திருமணம் நிச்சயமான தலம் திருவிடைக்கழி என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் திருவிடைக்கழித் தலத்துக்கான பாடல்களில் முதல் பாடலன இன்றைய பாடலிலும், வள்ளியைப் பாடுவதில் சலியாத அருணகிரிப் பெருமான் வள்ளியை மட்டுமே குறிப்பிடுகிறார்.
மனத்தில் எழும் ஆசைகளை வெல்வதற்கான பாடல் இது. சொல்லும்போதே டடடக் டடடக் என்று குதிரை நடப்பது போன்ற ஒலி எழும்பக் காணலாம்.
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனதான
Advertisement
அனலப் பரிபுக் ககுணத் ரயம்வைத்
தடர்பொய்க் குருதிக் குடில்பேணா
அவலக் கவலைச் சவலைக் கலைகற்
றதனிற் பொருள்சற் றறியாதே
குனகித் தனகிக் கனலொத் துருகிக்
குலவிக் கலவிக் கொடியார்தங்
கொடுமைக் கடுமைக் குவளைக் கடையிற்
குலைபட் டலையக் கடவேனோ
தினைவித் தினநற் புனமுற் றகுறத்
திருவைப் புணர்பொற் புயவீரா
தெளியத் தெளியப் பவளச் சடிலச்
சிவனுக் கொருசொற் பகர்வோனே
கனகச் சிகரக் குலவெற் புருவக்
கறுவிப் பொருகைக் கதிர்வேலா
கழியைக் கிழியக் கயல்தத் துமிடைக்
கழியிற் குமரப் பெருமாளே.
</p><p align="justify"> </p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/259804539&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>