முகப்பு
கிரிக்கெட்

பிளேயிங் லெவனில் விளையாடாத நிதீஷ் ராணாவுக்கு அபராதம்..! என்ன காரணம்?

தில்லி கேபிடல்ஸ் வீரர் நிதீஷ் ராணாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து...

Updated On : 12 ஏப்ரல் 2026, 12:16 pm IST
தில்லி கேபிடல்ஸ் வீரர் நிதீஷ் ராணா. - படம்: எக்ஸ் / தில்லி கேபிடல்ஸ்.
பகிர்:

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பிளேயிங் லெவனில் விளையாடாத தில்லி கேபிடல்ஸ் வீரர் நிதீஷ் ராணாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நான்காவது நடுவருடன் களத்துக்கு வெளியே கடுமையான விவாதத்தில் ஈடுபட்டதால் இந்த அபாரதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது

நேற்றிரவு சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 212/2 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் 19ஆவது ஓவரின் பாதியில் ஸ்டப்ஸுக்கு புதிய கையுறைகள் (க்ளவ்ஸ்) வேண்டுமென கோரினார். போட்டிக்கு இடையில் இப்படி மாற்ற முடியாது என களத்துக்கு வெளியே இருந்த நான்காவது நடுவர் தடுத்து நிறுத்தினார்.

இதற்கேற்றார்போல ஸ்டப்ஸ் ஓவர்டன் வீசிய பந்தில் ஆட்டமிழப்பார். இதனால், விரக்தியடைந்த நிதீஷ் ராணா நான்காவது நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தக் காரணத்தினால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபாராதம் மட்டுமில்லாமல் ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தில்லி பேட்டர் நிதீஷ் ராணாவுக்கு ஐபிஎல் நடத்தை விதிமுறைகள் லெவல் 1 மீறியதால், போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 25 சதவிகிதம் அபாரதம் விதிக்கப்படுகிறது. மேலும், அவருக்கு ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

தில்லி அணியின் பயிற்சியாளரும் நடுவருடன் இது குறித்து வாதிடுவார். ஆனால், நிதீஷ் ராணா எல்லை மீறிச் சென்றதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

summary

Rana fined 25% match fee for arguing with umpire what is the reason.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments