பகுதி - 142
விநாயகமலை எனப்படும் பிள்ளையார்பட்டியில் எழுந்தருளியுள்ள முருகன் மேல் பாடப்பட்டுள்ள ஒரே திருப்புகழ் இது. நாமறிந்துள்ள பிள்ளையார்பட்டிதான் இத்தலம் என்று தோன்றினாலும்,
விநாயகமலை எனப்படும் பிள்ளையார்பட்டியில் எழுந்தருளியுள்ள முருகன் மேல் பாடப்பட்டுள்ள ஒரே திருப்புகழ் இது. நாமறிந்துள்ள பிள்ளையார்பட்டிதான் இத்தலம் என்று தோன்றினாலும், கதிர்காமத்திலும் ஒரு விநாயகமலை இருப்பதாகத் தெரிகிறது என்று தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை குறிப்பெழுதுகிறார்.
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை, சேலம் வெளியிட்டுள்ள பதிப்பில், “விநாயகமலை: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில் என்று பிரபலமாக அழைக்கப்பெறும் இத்தலம். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து 8 கிலோ மீட்டரில் உள்ளது.
வாடாமலர் மங்கையுடன் மருதீசர் அருள்பாலிக்கிறார். கற்பகவிநாயகர் வடக்கு நோக்கி இரண்டு கரங்களுடன், வலதுகையில் சிறிய லிங்கத்தைக் கொண்டுள்ளார். குடவரைக் கோயில். இத்தலத்துக்கு எருக்காட்டூர், மருதங்குடி, திவீங்கைக்குடி, கணேசபுரி என்றும் பெயர்கள் உண்டு. அருணகிரியார் போற்றும் விநாயகமலையாக இதனைக் கருதலாம் என்னும் குறிப்பு இருக்கிறது.
Advertisement
‘நாதபிந்து கலாதி’ பாடலைப் போலவே இதிலும் ‘நமோநம’ கோஷம் ஓங்கியொலித்தாலும் இரண்டும் வேறுவேறு சந்த அமைப்பை உடையவை.
தனதன தானா தனாதன தனதன தானா தனாதன
தனதன தானா தனாதன - தனதான
சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
சததள பாதா நமோநம - அபிராம
தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம
சமதள வூரா நமோநம - ஜகதீச
பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம - உமைகாளி
பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம - அருள்தாராய்
இரவியு மாகாச பூமகியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் - முறையோவென்
றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
ரிகல்கெட மாவேக நீடயில் - விடுவோனே
மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு - மடிபேண
மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசர ராதார மாகிய - பெருமாளே.
</p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/245384417&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>