பகுதி - 294
தனித்தனித் தலங்களுக்கும், தனித்தனிப் படைவீடுகளுக்கும் திருப்புகழ்ப் பாடல்கள் இருப்பதை அறிவோம். குன்றுதோறாடல் என்று ஐந்து பாடல்கள் இருப்பதையும்
தனித்தனித் தலங்களுக்கும், தனித்தனிப் படைவீடுகளுக்கும் திருப்புகழ்ப் பாடல்கள் இருப்பதை அறிவோம். குன்றுதோறாடல் என்று ஐந்து பாடல்கள் இருப்பதையும் பார்த்தோம். ஆறுபடை வீடுகளையும் சேர்த்து, ‘அறுபதி’ என்றும் ‘ஆறு திருப்பதி’ என்றும் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் முதலாவதை இன்று பார்ப்போம். அடுத்ததை, இதன் பொருளைப் பார்த்தபிறகு எடுத்துக் கொள்வோம்.
திருவடியைப் பெறுவதை வேண்டுதலாக வைக்கும் இந்தப் பாடலின் அமைப்பு, அடிக்கு 31 எழுத்துகள்; ஏழு, பதினாறு, இருபத்தைந்தாம் எழுத்துகள் நெடில்; மற்ற அனைத்து எழுத்துகளும் குறில்; இடையின மெய்யொற்றுகள் விரவி வந்தாலும் வல்லின மெல்லின ஒற்றுகள் அறவே இல்லை. மற்ற பாடல்களைப் போலவே மிக இறுக்கமான தாளப் பின்னலையும் சொற்கட்டையும் கொண்ட பாடல்.
தனதன தனதானன தனதன தனதானன
தனதன தனதானன தனதான
அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள்
அபகட மகபாவிகள் விரகாலே
அதிவித மதராயத நிதமொழி பலகூறிகள்
அசடரொ டுறவாடிகள் அநியாயக்
கலைபகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள்
கருதிடு கொடியாருட னினிதாகக்
கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை
கழலிணை பெறவேயினி யருள்வாயே
அலைபுனல் தலைசூடிய பசுபதி மகனாகிய
அறுமுக வடிவே அருள் குருநாதா
அசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெற
அதிரிடும் வடிவேல்விடு மதிசூரா
தலைய யனறியா வொருசிவகுரு பரனேயென
தரணியி லடியார்கண நினைவாகா
சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய
தடமயில் தனிலேறிய பெருமாளே.
</p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/272415367&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p> </p>
Advertisement